பெரம்பூர்: பட்டாளம் கான்ரான்ஸ்மித் நகரில் உள்ள தேவிகருமாரியம்மன் கோயிலில் 100க்கும் மேற்பட்ட உறவினர்கள் முன்னிலையில் தனிமனித இடைவெளி உள்ளிட்ட எந்த வித அரசு உத்தரவையும் கடைபிடிக்காமல் விஜய், நந்தினி என்ற தம்பதிக்கு திருமணம் நடைபெற்றது. இது தொடர்பாக அப்பகுதியினர் சிலர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து அங்குவந்த ஓட்டேரி போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் திருமண தம்பதியினரின் பெற்றோரை அருகில் உள்ள மாநகராட்சி உதவி பொறியாளர் அலுவலகத்தில் வரவழைத்து விசாரித்தனர்.