மெக்சிகோ: மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மெக்சிகோவில் பசிபிக் கடலோர மாநிலமான ஓக்சாகாவில் உள்ள சாண்டமரியா என்ற நகரை மையமாக கொண்டு நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.4 ஆக பதிவாகி உள்ளது. இது தென் மேற்கு மெக்சிகோவின் கடலோர பகுதியை மையமாக கொண்டு 12 கி.மீ. ஆழத்தில் உருவாகி உள்ளது. மேலும், அருகில் உள்ள கவுதமாலா, மத்திய மெக்சிகோ பகுதிகளிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.