லண்டன்: காயம் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், முழுமையாக குணமடைந்த நிலையில் மீண்டும் களமிறங்கத் தயாராகி உள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக தென் ஆப்ரிக்க டி20, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் இருந்து ஆர்ச்சர் விலக நேர்ந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர், ஐபிஎல் தொடரிலும் இருந்து விலகினார். ஆனால், கொரோனா பீதி காரணமாக ஐபிஎல் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட இடைவெளிக்குப் பின்னர் நடைபெற உள்ள முதல் சர்வேதச கிரிக்கெட் போட்டியாக, இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் பூட்டிய அரங்கில் ஜூலை 8ம் தேதி தொடங்குகிறது. இதற்கிடையில் காயம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஆர்ச்சர் முழுமையாக குணமடைந்துள்ளார்.