திருமலை: கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் தவிர மற்ற சில மாநிலங்களில் உள்ள கோயில்களில் குறைந்த எண்ணிக்கையில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதேபோல் உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.