மதுரையில் பொதுமுடக்க விதிகளை மீறி திறக்கப்பட்ட 43 கடைகளுக்கு சீல்!: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி!

மதுரை: மதுரையில் பொதுமுடக்க விதிகளை மீறி திறக்கப்பட்ட 43 கடைகளுக்கு மாநகராட்சி

அதிகாரிகள் சீல் வைத்தனர். வரும் 30ம் தேதி வரை பொதுமுடக்க ஊரடங்கு அமலில் உள்ள

நிலையில் விதிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா

பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தாக்கம் அதிகம் உள்ள

மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும்

முழுமுடக்கம் அமலில் உள்ளது.

மதுரை மாவட்டத்தில் நாளுக்கு நாள் நோய் தொற்று தாக்கம் அதிகரித்து வரும் காரணத்தினால் ஊரடங்கு உத்தரவு இன்று அதிகாலை முதல் பிறப்பிக்கப்பட்டு,

மதுரை மாநகராட்சி பகுதிகளான மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் பறவை பேரூராட்சி

ஆகிய பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களை

வாங்குவதற்கு மட்டும் மக்கள் வெளியே செல்லக்கூடிய நிலையில், காலை 6 மணி முதல் மதியம் 2

மணி வரை கடைகள் திறந்திருக்க வேண்டும் என்று மதுரை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம்

தெரிவித்திருந்தது.

மேலும் முழு கண்காணிப்பு பணியில் மாநகர காவல்துறையும் ஈடுபட்டு வருகிறது. தொடர்ந்து, ஊரடங்கு உத்தரவு முறையாக பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஊரடங்கு உத்தரவை பின்பற்றாமலும், தனிமனித இடைவெளி மற்றும் முகக்கவசம் அணியாமலும்  திறந்து வைக்கப்பட்டிருந்த , பழக்கடை, டீ கடை மற்றும் பேக்கரி உள்ளிட்ட 43 கடைகளுக்கு மதுரை மாநகராட்சி அதிகாரிகளும், மாநகர காவல்துறையினரும் சீல் வைத்துள்ளனர்.

Related Stories: