புதுடெல்லி: ரயில்வே துறை 5,321 ரயில் பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்றி மாநில அரசுகளிடம் ஒப்படைப்பதாக அறிவித்தது. அதன்படி டெல்லிக்கு 503, உபிக்கு 372 பெட்டிகள் அனுப்பப்பட்டுள்ளன. மற்ற பெட்டிகள் தயாராக இருந்தாலும் அவற்றை பெற யாரும் தயாராக இல்லை.
இதற்கு காரணம், ரயில் பெட்டிக்குள் இருக்கும் அதிகபட்ச வெப்பம்தான். குளிர்சாதன வசதி இல்லாத பெட்டியை மட்டுமே கொரோனா வார்டாக மாற்ற வேண்டுமென சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இதி்ல், பயோ டாய்லெட், ஆக்ஸிஜன் சிலிண்டர், பவர் சாக்கெட், குளியலறை என எல்லா வசதிகள் இருந்தும் ரயில் பெட்டிக்குள் ஏற்படும் வெப்பத்தை தணிக்க முடியவில்லை.