மத்தியப்பிரேதேசம்: 1980-ம் வருடம் மத்திய பிரதேச மாநில லாரி ஓட்டுநர் ஒருவர் வழக்கம் போல் தனது பணியை கவனித்து கொண்டிருக்கையில், சாலையில் பெண் ஒருவர் மிகவும் பரிதாபமாக நிற்பதை கண்டு கடந்து செல்ல மனம் வராமல் அவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர் அருகில் சென்று பார்த்த பொழுது, உடம்பில் தேனீக்கள் கொட்டிய நிலையில், வேற்று மாநிலத்தில் இருந்து வந்தவர் போல் தெரியவே தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற லாரி ஓட்டுநர் அவரை கவனித்து வந்துள்ளார். கிட்டத்தட்ட 40 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் அவருடன் நேரத்தை செலவழித்து வந்த லாரி ஓட்டுனரின் குடும்பம் அவர் வாய் வழியே வந்த பர்சபூர் என்ற பெயரை கொண்டு கூகுள் மற்றும் வாட்ஸ் ஆப் உதவியுடன் அவரது குடும்பத்தை ஒரு வழியாக கண்டு பிடித்து விட்டனர்.