புதுடெல்லி: வங்கதேசத்தை வலைத்து போடும் வகையில், அந்நாட்டின் 97 சதவீத பொருட்களுக்கு சீனா வரி விலக்கு அளித்துள்ளது. இந்திய எல்லைக்குள் இருக்கும் கலபானி, லிம்பியாதுரா, லிபுலேக் உள்ளிட்ட பகுதிகளை தனக்கு சொந்தமானவை என கூறி கடந்த வாரம் நேபாளம் புதிய வரைபடத்தை வெளியிட்டது. இதன் பின்னணியில் சீனா உள்ளது. இந்நிலையில், கடந்த 15ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் நடத்தி தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த பதற்றம் இன்னும் தணியவில்லை. இந்நிலையில், இந்தியாவின் அண்டை நாடுகளை தனக்கு ஆதரவாக வலைத்து போடும் முயற்சிகளில் சீனா தீவிரமாக இறங்கியுள்ளது.