புதுடெல்லி: வழக்கு விசாரணைக்கு டி-சர்ட்டுடன் கட்டிலில் படுத்தவாறு வக்கீல் ஆஜரானது உச்ச நீதிமன்ற நீதிபதியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரியானாவின் ரேவாரியில் நிலுவையில் உள்ள குடும்ப நல வழக்கை, பீகாரின் ஜெகனாபாத் நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் ஆஜரான வக்கீல் வீட்டில் டி-சர்ட்டுடன் கட்டிலில் படுத்தவாறு ஆஜரானார். இதை பார்த்து நீதிபதி அதிர்ச்சி அடைந்தார்.