கீழடி: கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் குழந்தையின் முழு அளவிலான எலும்புக்கூடு முதன் முறையாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு கொந்தகை, மணலூர், அகரம் மற்றும் கீழடி உள்ளிட்ட நான்கு இடங்களில் நடைபெற்று வருகிறது. ரூ. 40 லட்சம் செலவில் கடந்த பிப்ரவரி 19 தேதி முதல் இந்த அகழாய்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொந்தகையில் இன்று காலை நடந்த அகழாய்வின் போது ஒரு குழந்தையின் எலும்புக்கூடு முழு அளவில் கிடைத்துள்ளது.