கொரோனா தாக்கத்தின் விளைவு: 35,000 பேரை பணிநீக்கம் செய்யவுள்ளதாக ஹெச்.எஸ்.பி.சி. வங்கி அதிரடி அறிவிப்பு!

லண்டன்: கொரோனா தாக்கத்தின் எதிரொலியாக 35 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக இங்கிலாந்தின் பிரபல வங்கியான ஹெச்.எஸ்.பி.சி. அறிவித்துள்ளது. ஹெச்.எஸ்.பி.சி. வங்கி முன்னதாக கொரோனாவை காரணம் காட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பே ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்தது. சர்வதேச அளவில் பல்வேறு துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் பணிநீக்கம், சம்பள குறைப்பு, சம்பள உயர்வு நிறுத்தி வைப்பு, புதிய பணி அமர்தல் நிறுத்தி வைப்பு என பல்வேறு நடவடிக்கைகளை அதிரடியாக மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் தனது வணிகத்தில் உள்ள செலவுகளை குறைக்கும் நோக்கத்தில் 35 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்வதாக ஹெச்.எஸ்.பி.சி. வங்கி அறிவித்துள்ளது. இது கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் ஹெச்.எஸ்.பி.சி. வங்கி எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்நிறுவனத்திற்கு உலகம் முழுக்க உள்ள 2 லட்சத்து 35 ஆயிரம் ஊழியர்களுக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

அதில் புதிய பணியமர்த்தலை முடக்குவதாகவும் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான நோயல் குயின் தெரிவித்துள்ளார். பணியிழப்புகளை கால வரையின்றி நிறுத்த முடியவில்லை எனவும், இது எப்போது முடியும் என்ற ஒரு கேள்விதான் தங்களிடமும் உள்ளது என்றும் நோயல் குயின் கூறியுள்ளார். கடந்த பிப்ரவரியில் அறிவித்த முதல் அறிவிப்புகள் இன்னும் அவசியமானவை என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த மார்ச் மாதத்தில் மறு சீரமைப்பின் ஒரு பகுதியாக, 4.5 பில்லியன் டாலர் செலவினைக் குறைப்பதற்காக ஹெச்.எஸ்.பி.சி, கொரோனா காலத்தில் ஊழியர்களை பணி நீக்கம் செய்வது தவறு என்று பணி நீக்கத்தினை ஒத்தி வைத்தது. ஆனால் தொடந்து லாபம் வீழ்ச்சி கண்டு வருவதால், பொருளாதாரமும் மந்த நிலையும் ஒரு சவாலான நேரத்தினை சுட்டிக் காட்டுகிறது. ஆகவே ஹெச்.எஸ்.பி.சி வங்கி மீண்டும் பணி நீக்கம் செய்யும் திட்டத்தினை கையில் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Related Stories: