சீர்காழி: சீர்காழி அருகே சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் இறந்தவர் உடலை வயலுக்குள் இறங்கி தூக்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் மருதங்குடி ஊராட்சியில் ஐவேலி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் உயிரிழந்தால் 1 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள உப்பனாற்றின் கரையில் அடக்கம் செய்வது வழக்கம். இறந்தவர்களின் உடலை எடுத்து செல்வதற்கு சாலை வசதி இல்லாததால் வயலில் இறங்கி இறந்தவரின் உடலை தூக்கி செல்லும் நிலை காலம் காலமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஐவேலி கிராமத்தை சேர்ந்த லட்சுமி என்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.