சென்னை: திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., வெளியிட்ட அறிக்கை: “கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு திணறி வருவதாக எங்கள் தலைவர் கூறுவது முற்றிலும் தவறானது” என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுவதற்குக் கொஞ்சமாவது தகுதி இருக்கிறதா என அவர் யோசித்துப் பார்க்க வேண்டும். “கொரோனா சிகிச்சைக்கு மருத்துவமனை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துங்கள்” என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ஜனவரி 7ம் தேதியே எழுதிய கடிதத்தை தலைமாட்டில் வைத்துக் கொண்டு இன்றுவரை முழு வீச்சில் நடவடிக்கை எடுக்காமல் தூங்கிக் கொண்டிருப்பது யார்?.