சாண்டியாகோ: கொரோனா பலியை குறைத்துக் காட்டிய விவகாரத்தால் சிலி நாட்டின் சுகாதார அமைச்சர் ஜெய்மி மணலிச் தனது பதவியை ராஜினாமா செய்தார். லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டில் கொரோனாவால் 3,000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாக கூறப்பட்டாலும், அரசு தரப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் குறைத்து காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. சிஐபிஇஆர் என்ற புலனாய்வு பத்திரிகை ெவளியிட்ட ஆதாரபூர்வமான செய்தியில் 5,000க்கும் மேற்பட்டோர் பலியான தகவல்கள் வெளியாகின.