சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடியில் தற்போது 6ம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி கீழடி மட்டுமின்றி அதன் அருகே உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. கீழடியில் ஏற்கனவே தோண்டப்பட்ட குழிகளில் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. தற்போது கீழடியில் நடைபெற்று வரும் 6ம் கட்ட அகழாய்வில் மீண்டும் மண்டை ஓடு கண்டறியப்பட்டுள்ளதால் தொல்லியல் ஆய்வாளர்களை வேகப்படுத்தியுள்ளது. கொந்தகை அகழாய்வில் தோண்டப்பட்ட 5 குழிகளில் இதுவரை 10 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் இரண்டு தாழிகளில் இருந்த எலும்புகள் எடுக்கப்பட்டு மரபணு சோதனை நடத்தப்பட்டு வருகின்றன. மூன்றாவது தாழியில் இருந்து சிறுசிறு எலும்பு துண்டுகள் மட்டும் வெளியே எடுத்துவந்த நிலையில் மண்டை ஓடு கண்டறியப்பட்டுள்ளது.