மும்பை: சென்னையின் எப்சி கால்பந்து கிளப் சார்பில் 50,000 சிறுவர், சிறுமியருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அந்த அணியின் இணை உரிமையாளர் வீடா தானி கூறினார். கோ ஸ்போர்ட்ஸ் அறக்கட்டளை சார்பில் ‘இந்திய விளயாட்டு உலகில் வீராங்கனைகள், தொழில்முனைவோர் சந்திக்கும் சவால்கள்’ குறித்த விவாதத்திற்கு இணையதளம் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் பேசிய வீடா தானி, ‘சென்னையின் எப்சி அணியின் அடித்தள மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக 50 ஆயிரம் சிறுவர், சிறுமிகளை தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்படும். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் சிறுமிகள்.