சென்னை: தமிழகத்தில் பாதிப்பு தொடர்பாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள காணொலியில் கூறியிருப்பதாவது: கொரோனாவை முன்கூட்டியே கண்டுபிடிப்பதால் விரைந்து குணப்படுத்த முடிகிறது. இதுவரை 27 ஆயிரம் பேரை குணப்படுத்தி உள்ளோம். இறப்பை தடுக்க நோயை கண்டுபிடிக்க வேண்டும். நோயை கண்டுபிடிக்க அதிக பரிசோதனை செய்ய வேண்டும். இதன்படி தமிழகத்தில் நேற்று 18,403 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. அதிக சோதனை செய்த காரணத்தால்தான் அதிக பாதிப்பு கண்டுபிடிக்கப்படுகிறது. எந்த தகவலையும் அரசு மறைக்கவில்லை. எல்லா தகவலையும் அரசு வெளிப்படையாக அறிவிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களை தேடி பிடிக்கிறோம். 80 லட்சம் பேர் மக்கள் வசிக்கும் சென்னையில் 1 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் சோதனை ெசய்த காரணத்தால் தான் இறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் 17 ஆயிரம் படுக்கைகள், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் 5 ஆயிரம் படுக்கைகள், தமிழகம் முழுவதும் 70 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.