மும்பை: கோவிட் 19 வைரஸ் தொற்றால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மராட்டியம் மாநிலத்தின் மும்பை மாநகரத்தின் சில வழித்தடங்களில் புறநகர் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மராட்டிய அரசால் அடையாளம் காணப்பட்டுள்ள அத்தியாவசிய ஊழியர்களுக்காக புறநகர் ரயில் சேவையை மேற்கு ரயில்வே தொடங்கியிருக்கிறது. காலை 5.30 மணி முதல், இரவு 11.30 மணி வரை 15 நிமிட இடைவெளிகளில் இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன. முதல்கட்டமாக சர்ச் கேட், விரார் வழித்தடங்களிலும், சில ரயில்கள் தகாணி ரோட் ரயில்நிலையம் வரையிலும் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து அங்குள்ள பயணி தெரிவித்ததாவது, நான் உமந்தரில் இருந்து வருகிறேன். பேருந்தில் வந்தால் 4 மணி நேரம் ஆகும். தற்போது ரயில் இயக்கப்படுவதால் ஒரு மணி நேரத்தில் வந்து விடுகிறேன்.