புதுடெல்லி: இந்தியா பலவீனமான நாடு அல்ல என்றும் அதன் பாதுகாப்பு திறன் அதிகரித்துள்ளதாகவும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘ஜன் சம்வத் பேரணி’ என்ற தலைப்பில் ஜம்மு காஷ்மீர் மக்களிடையே வீடியோ கான்பரன்சிங் மூலமாக பேசியதாவது:எந்த சூழ்நிலையிலும் தேசிய பெருமையில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என நான் உறுதியளிக்கிறேன். இந்தியா இனி பலவீனமான நாடு கிடையாது. தேசிய பாதுகாப்பிற்கான நமது திறன் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த வலிமையானது யாரையும் அச்சுறுத்துவதற்காக அல்ல. நமது நாட்டின் பாதுகாப்புக்காக தான். இந்தியாவுடான எல்லைப் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலமாக தீர்ப்பதற்கு சீனா விருப்பம் தெரிவித்துள்ளது. இரு நாட்டுக்கும் இடையிலான மோதலை தணிப்பதற்கான இந்தியாவின் முயற்சியும் இதுதான்.