உஜ்ஜைனி: மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் கொரோனா பரவல் கடந்த மூன்று மாதங்களாக தீவிரமாக இருப்பதால், தொடர்ந்து சிவப்பு மண்டலத்தில் உள்ள பகுதியாகவே நீடிக்கிறது. கொரோனா பரவல் கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டதால், உஜ்ஜைனி மாவட்ட நிர்வாகம் இப்போது கடவுளிடம் பிரார்த்தனை செய்து வருகிறது. இந்நிலையில், நேற்று உஜ்ஜைனி மாவட்ட கலெக்டர் ஆஷிஷ் சிங், ேபாலீஸ் எஸ்பி மனோஜ் சிங் ஆகியோர் உஜ்ஜைனி அடுத்த குத்ரியில் உள்ள பிரபலமான 24 தூண் மாதா கோவிலுக்கு சென்றனர். அங்கு அவர்கள் நீண்ட நேரம் பூஜைகள் செய்த பிறகு, சுவாமிக்கு மது படைத்து வழிபாடு செய்தனர்.