புதுடெல்லி: ‘உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள், புலம் பெயர் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்வதை முதல்வர் யோகி ஆதித்யநாத் கண்டு கொள்வதில்லை,’ என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார். கொரோனா ஊரடங்கு நடவடிக்கை காரணமாக லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள், தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் வருமானம் இல்லாததாலும், குடும்பத்தை நடத்த முடியாததாலும் தற்கொலை செய்து கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.