கிழக்குக் கடற்கரை சாலையில் விரிசல்: அடிக்கடி விபத்தால் வாகன ஓட்டிகள் அவதி

அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினம் அருகில் உள்ள ஏரிப்புறக்கரை பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாக நேரிடுகிறது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ரயில்வே கேட் அருகில் மகிழங்கோட்டை பிரிவு சாலையை ஒட்டி உள்ள கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் சுமார் 100 அடி தூரம் சாலையில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. இந்த விரிசல்கள் நீண்ட நாளாகவே இருந்து வரும் நிலையில் அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் பள்ளம் தெரியாமல் திடீரென விழுந்து காயமடைந்து வருகின்றனர். ராஜாமடத்திலிருந்து மகிழங்கோட்டை பிரிவு சாலை வரை கிழக்குக் கடற்கரைச் சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வரும் நிலையில் விபத்தை தடுக்க உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Related Stories: