அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கொரோனா தொற்று இருப்பது தெரிந்தும், மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்த 2 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீண்ட போராட்டத்திற்கு பின், அவர்கள் இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். விசாரணையில் அவர்கள் இருவரும் சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. திருநெல்வேலி அருகே தாய் வீட்டில் தங்கி 10ம் வகுப்பு படித்து வரும் மகனுக்கு ஹால் டிக்கெட் வாங்குவதற்காக கடந்த 7ம் தேதி சென்னையில் இருந்து அவர்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.