ஈரோடு: 10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் தேர்ச்சி குறித்து அரசு பரிசீலனை செய்யும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாநகராட்சி சார்பில் வ.உ.சி. மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தினசரி மார்க்கெட் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு மார்க்கெட்டை திறந்து வைத்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு தேர்வில் இருந்து 40 சதவீதம் மதிப்பெண், அரையாண்டு தேர்வில் இருந்து 40 சதவீதம் மதிப்பெண், வருகை பதிவேட்டில் இருந்து 20 சதவீதம் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.