மும்பை: புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க தனி விமானங்களை ஏற்பாடு செய்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உதவி செய்துள்ளார். மும்பையில் தவித்து வந்த 700 புலம்பெயர் தொழிலாளர்களை உத்தரப் பிரதேசம் அனுப்பி வைக்க 4 தனி விமானங்களை அமிதாப் பச்சன் ஏற்பாடு செய்துள்ளார். 700 புலம்பெயர் தொழிலாளர்களும் 4 விமானங்கள் மூலம் உ.பி.யின் லக்னோ, கோரக்பூர், வாரணாசி, அலகாபாத் ஆகிய நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 3 விமானங்கள் நேற்று இரவு புறப்பட்டுச் சென்றன. இன்று அதிகாலை ஒரு விமானம் புறப்பட்டது.
இந்த விமானங்களில் பயணித்த புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் உன்னாவ், கோண்டா, லக்னோ உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அரசுப் பேருந்து மூலம் சொந்த ஊர்களுக்குப் பாதுகாப்பாகச் சென்று சேர்ந்தனர்.