புதுடெல்லி: ரசிகர்கள் இன்றி ஐபிஎல் போட்டியை நடத்தப்படும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தகவல் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டித்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடந்தால் வெளிநாட்டு வீரர்கள் வர முடியாத அளவுக்கு பயணக்கட்டுப்பாடுகள் இருப்பதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று காரணமாக சர்வ தேச விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது சர்வதேச விமான போக்குவரத்து தொடங்கி உள்ள நிலையில் ரசிகர்கள் இன்றி போட்டியை நடத்த முடியுமா? என்பது பற்றி ஆலோசிக்கப்படுகிறது. இது தொடர்பாக பிசிசிஐ தலைவர் கங்குலி மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.