பீஜிங் : சீனாவில் பல இடங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. யுகான், சுற்றுலாத்தலமான யாங்ஸ்யு உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த 2-ம் தேதி முதல் பலத்த பெய்து வருகிறது. இதன் காரணமாக 8 மாகாணங்களில் உள்ள 110 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. யாங்ஸ்பு மாகாணத்தில் ஆயிரம் ஓட்டல்கள், 5 ஆயிரம் கடைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தென்மேற்கு மாகாணத்தில் 8 பேர் உள்பட மொத்தம் 20 பேர் கனமழைக்கு உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.