துபாய்: டெஸ்ட் போட்டிகளின்போது எந்த வீரருக்காவது கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தால், அவருக்கு பதிலாக மாற்று வீரரைக் களமிறக்குவதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இது குறித்து ஐசிசி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: டெஸ்ட் போட்டிகளின்போது எந்த ஒரு வீரருக்காவது கோவிட்-19 நோய் தொற்று அறிகுறிகள் ஏற்பட்டால், அந்த வீரருக்கு பதிலாக மாற்று வீரரை களமிறக்க அணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. பவுன்சர் பந்துவீச்சு தாக்குதலால் பாதிக்கப்படும் பேட்ஸ்மேனுக்கு பதிலாக தேர்வு செய்யப்படும் மாற்று வீரருக்கு போட்டி நடுவர் ஒப்புதல் அளிக்கும் நடைமுறையே இதிலும் பின்பற்றப்படும்.