ராஜபாளையம்: ராஜபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதால் அரசு அறிவித்தபடி புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். ராஜபாளையம் மற்றும் அதன்சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து தினமும் ஏராளமான டூவீலர், நான்கு சக்கர வாகனங்கள் ராஜபாளையம் வந்து செல்கின்றன. இவை தவிர கனரக வாகனங்களும் ராஜபாளையம் வழியாக செல்கின்றன. இந்நிலையில் சாலையோரங்களில் டூவீலர்கள் நிறுத்தப்படுவதால் காலை, மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி, கல்லூரி, அலுவலக பணிக்கு செல்வோர் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.