புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள பிஞ்ஜோரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று ராணுவ வீரர்கள், சிஆர்பிஎப் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.