ஒடிசாவில் பயிற்சி விமானம் தரையில் விழுந்து விபத்து.:விமான விபத்தில் தமிழக பெண் பயிற்சி விமானி இறப்பு

ஒடிசா: ஒடிசாவில் நிகழ்ந்த விமான விபத்தில் தமிழகத்தை சேர்ந்த பெண் பயிற்சி விமானி உட்பட 2 பேர் உயிரிழந்தனர். தெங்கனல் மாவட்டத்தில் உள்ள பிரசல் என்ற விமான தளத்தில் பயிற்சி விமானிகள் வழக்கமான பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அவ்வாறு பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது குட்டி விமானம் ஒன்று திடீரென பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது. விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் தமிழகத்தை சேர்ந்த பெண் பயிற்சி விமானி அனிஷ் பாத்திமா உயிரிழந்தார்.

அவர் சென்னை மாடம்பாக்கத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அவருடன் சென்ற பீகாரைச் சேர்ந்த கேப்டன் சஞ்சீவ் குமாரும் உயிரிழந்துள்ளார். இருவரது உடல்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் விமான விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: