நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே பள்ளியாடி அருகில் ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டப்பதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்று இரவு பெய்த மழையால் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் பாதையில் பள்ளியாடி அருகே திடீரென மண்சரிவு ஏற்பட்டது. மண்சரிவால் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வரவேண்டிய சரக்கு ரயில் ரத்து செய்யப்பட்டது. அதுபோல நாகர்கோவிலில் பணியாற்றும் பணியாளர்கள் திருவனந்தபுரத்தில் இருந்து வரும் பணியாளர்கள் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.