பிரேசில்: உலக அளவில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நாடுகளில் பிரேசில் முதல் இடத்தில் உள்ளது. உலகளவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது. வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மரணித்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி பிரேசில் முதலிடம் பிடித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றானது லத்தீன் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டில் சமீப காலமாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இன்று காலை நிலவரப்படி, பிரேசிலில் 27 ஆயிரத்து 500 பேருக்கு தொற்று ஏற்பட்டதை அடுத்து, அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 73 ஆயிரமாக உயர்ந்துள்ளது.