மும்பை : மகாராஷ்டிராவில் பத்தாயிரம் ரெம்டிசிவிர் குப்பிகளை வாங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. மகாராஷ்டிரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82 ஆயிரத்தைத் தாண்டியுள்ள நிலையில், விரைவில் பாதிப்பு எண்ணிக்கை சீனாவை முந்த உள்ளது. இன்றைய நிலவரப்படி மகாராஷ்டிரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 82,968 ஆக உள்ளது. இதுவரை 2,969 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 37,390 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு இதே வேகத்தில் அதிகரித்தால் ஓரிரு நாட்களில் சீனாவை மகாராஷ்டிர மாநிலம் முந்திவிடும்.சீனாவில் சனிக்கிழமை நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 83,036 ஆக உள்ளது. சீனாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 4,634 ஆக உள்ளது.