திருவனந்தபுரம்: குருவாயூர் கோயிலில் திருமணங்களை நடத்தலாம் எனவும், அதிகபட்சமாக 50 பேர் கலந்து கொள்ளலாம் எனவும் கேரள முதல்வர் பினராய் விஜயன் ெதரிவித்தார். இதையடுத்து குருவாயூர் ேகாயிலில் திருமணங்களை நடத்த அனுமதிப்பது தொடர்பான தேவசம்போர்டின் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் 4ம் தேதி முதல் திருமணங்களை நடத்த அனுமதிக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது. ஒரு திருமணத்தில் மணமக்கள் உட்பட 10 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். கலந்து கொள்பவர்கள் அனைவரும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, மருத்துவ பரிசோதனை சான்றிதழ் அளிக்க வேண்டும்.