திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில், கோடை வெயில் தொடர்ந்து 100 டிகிரியை கடந்து சுட்டெரிக்கிறது. இதனால் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 78 அடியாக குறைந்திருக்கிறது. அக்னி நட்சத்திர வெயில் காலம் கடந்த மாதம் 28ம் தேதியுடன் முடிந்தது. ஆனாலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்ைல. கத்தரி எனப்படும் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும், 100 டிகிரியை கடந்து வெயில் சுட்டெரிக்கிறது.
வழக்கமான கோடை மழையும் இதுவரை கைகொடுக்கவில்லை. நேற்று முன்தினம் இரவு மாவட்டம் முழுவதும் பரவலான மழை பெய்தது. அதிகபட்சமாக ஆரணியில் 19 மிமீ மழையும், ஜவ்வாதுமலை பகுதியில் 12 மிமீ மழையும் பதிவானது. மற்ற பகுதிகளில் லேசான மழை பெய்தது.தொடர்ந்து சுட்ெடரிக்கும் கோடை வெயிலால், மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்துவிட்டது. பெரும்பாலான நீர்நிலைகள் வறட்சியின் கொடூரத்தை உணர்த்தும் சாட்சிகளாக மாறியிருக்கிறது.இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை, குப்பனத்தம் அணை, மிருகண்டா நதி அணை, செண்பகத்ேதாப்பு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடும் வெயில் காரணமாகவும், மழை பெய்யாததாலும் அணைகளின் நீர்மட்டம் சரிந்துவிட்டது.