தூத்துக்குடி: இந்தியாவில் இருந்து வேலைவாய்ப்பு, வணிகம், கல்விக்காக இலங்கைக்கு சென்றவர்கள் கொரோனா ஊரடங்கால் அங்கிருந்து திரும்ப முடியாமல் தவித்தனர். இலங்கையில் தவிக்கும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களை கடற்படை கப்பலான ஐஎன்எஸ் ஜலஷ்வா மூலம் தூத்துக்குடிக்கு அழைத்து வர மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி இலங்கை துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு அந்த கப்பல் 713 பயணிகளுடன் புறப்பட்டது. முன்னதாக பயணிகளை சுகாதார பணியாளர்கள் பரிசோதித்தனர். கப்பல் பயணிகளில் கர்நாடகா, புதுச்சேரியை சேர்ந்த தலா இருவரும், கேரளாவைச் சேர்ந்த 3 பேர் தவிர மற்ற 699 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.