ஐக்கிய நாடுகள்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 5 தற்காலிக உறுப்பு நாடுகளுக்கான தேர்தல் வரும் 17ம் தேதி நடக்க உள்ளது. இதில் இந்தியா வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 10 தற்காலிக உறுப்பினர் பதவிகளில் 5 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படும். இதில் தேர்வாகும் நாடுகளின் பதவிக்காலம் 2 ஆண்டுகள். இம்முறை ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இருந்து இந்தியா இப்பதவிக்கு போட்டியிடுகிறது. தேர்தலை நடத்துவது தொடர்பாக, 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐநா பொதுச்சபை கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், வரும் 17ம் தேதி தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.