லண்டன்: இங்கிலாந்து ராணி எலிசபெத், குதிரை சவாரி செய்து மகிழந்தார். இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இங்கிலாந்து ராணி எலிசபெத்(94) மற்றும் அவரது கணவர் பிலீப்(98) ஆகியோர் பக்கிங்காம் அரண்மனையில் இருந்து வெளியேறி லண்டனுக்கு மேற்கே உள்ள வின்ட்சர் கோட்டைக்கு சென்றனர். கொரோனா நோய் தொற்றை தவிர்க்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணி தனது கணவருடன் அங்கேயே தங்கி உள்ளார்.
இந்நிலையில், ராணி எலிசபெத் நேற்று முன்தினம் குதிரை சவாரி செய்து மகிழ்ந்தார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.