ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்காவில் காலில் காயம் ஏற்பட்டு நடக்க முடியாமல் தவித்த சிறுத்தையை மீட்ட வனத்துறையினர் கால்நடை மருத்துவர்களின் உதவியுடன் சிகிச்சை அளித்து வரும் நிலையில், தற்போது நடக்க துவங்கியுள்ளது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் இருந்து தோடர் மந்து செல்லும் சாலையில் கடந்த 16ம் தேதி சிறுத்தை ஒன்று காயத்துடன் கிடந்தது. பின்னங்காலில் ஏற்பட்ட காயத்தால், அது நடக்க முடியாமல் தவித்தது.
இதை கண்ட பூங்கா ஊழியர்கள் மற்றும் ேதாடர் மந்து மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற வனத்துறையினர் அதனை மீட்டு ஊட்டியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு ெகாண்டு வந்தனர். கடந்த 13 நாட்களாக கூண்டில் வைத்தே சிறுத்தைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்ைச அளித்து வருகின்றனர். நரம்பு மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.