நியூயார்க்: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அவசரக் கூட்டம் நேற்று கூடியது. இதில் ஐநா.வுக்கான அமெரிக்க தூதர் கெல்லி கிராப்ட் பேசுகையில், ``ஹாங்காங் மக்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் வகையில் சீன அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தை இயற்றி உள்ளது. சீனாவின் இந்த அத்துமீறலை சர்வதேச சட்டம் அனுமதிக்க போகிறதா? மனித உரிமைகளை பாதுகாப்பதில் ஐ.நா. என்ன நிலைப்பாடு எடுக்க போகிறது? சீனாவின் நடவடிக்கை உலகின் வர்த்தக மையமாக விளங்கும் ஹாங்காங்கின் அடிப்படை அரசியல் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் உள்ளது. எனவே, சீனா இதனை திரும்ப பெற அனைத்து நாடுகளும் வலியுறுத்த வேண்டும்’’ என்றார்.