கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தமிழக-கர்நாடக மாநில எல்லையான கக்கனல்லா சோதனைச்சாவடியில் நேற்று காலை போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலம் கொள்ளேகாலில் இருந்து கூடலூருக்கு காய்கறிகள் ஏற்றி வந்த சரக்கு வாகனம் வந்தது. அதனை போலீசார் சோதனையிட்டனர். அப்போது, காய்கறிகள் வைத்திருந்த பிளாஸ்டிக் பெட்டிகளுக்கு இடையே ஒரு பையில் கட்டு, கட்டாக பணம் மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். அதில் ரூ.51 லட்சம் இருந்தது.