மெல்போர்ன்: இந்திய அணியுடன் வரும் அக்டோபர் மாதம் டி20 தொடரில் விளையாட உள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், ஆஸி. கிரிக்கெட் வாரியம் தங்கள் அணிக்கான புதிய போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 9ம் தேதி முதல் ஜிம்பாப்வே அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடும் ஆஸி. அணி, அக்டோபரில் இந்தியாவுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும். முதல் போட்டி அக்.11ம் தேதி பிரிஸ்பேனில் நடைபெறும். இதைத் தொடர்ந்து கான்பெரா (அக்.14), அடிலெய்டு (அக்.17) மைதானங்களில் போட்டிகள் நடக்க உள்ளன.