அறந்தாங்கி: மணமேல்குடி அருகே மின்னல் தாக்கி 16 ஆடுகள் பலியாயின. புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியை அடுத்த பெருமருதூர் அருகே நாட்டாணி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் 16 ஆடுகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் தனக்கு சொந்தமான ஆடுகளை அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் மேய்வதற்காக விட்டிருந்தார். அப்போது திடீரென மழை பெய்துள்ளது. மழை பெய்தவுடன் 16 ஆடுகளும் அப்பகுதியில் இருந்த புளியமரத்தின் அடிக்கு சென்று ஒதுங்கி நின்றன. ஆறுமுகம் வேறு ஒரு மரத்தின் அடியில் நின்றிருந்தார். அப்போது ஆடுகள் நின்றிருந்த புளியமரத்தின் மீது மின்னல் தாக்கியது.