மேலூர்: மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி பகுதியில் நேற்று ஒரே நாளில் நாய்கள் கடித்து குதறியதில் 2 புள்ள மான்கள் பலியானது. மேலூர் அருகே ஆட்டுக்குளம் பகுதியில் 2 வயதுள்ள பெண் புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி வந்தது. இது மதுரை சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ள வெள்ளமலையில் இருந்து தண்ணீர் தேடியபடி வயல்பகுதி வழியாக வந்திருக்கலாம் என கூறப்பட்டது. தண்ணீர் தேடி வந்த இந்த மானை அப்பகுதியில் உள்ள நாய்கள் விரட்டி கடித்ததில் பலியானது.