பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில், கோடை கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நிறைவடைந்தது. இதில் விலங்குகள் அதிகம் நடமாட்டமுள்ள இடத்தில் சுழழும் கேமரா வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி வனக்கோட்டதிற்குட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, டாப்சிலிப் ஆகிய 4 சரகங்கள், கடந்த 18ம் தேதி கோடைகால வனவிலங்கு கணக்கெடுப்பு துவங்கியது. இப்பணி நேற்று முன்தினம் வரை தொடர்ந்து ஒரு வாரம் நடைபெற்றது. மொத்தம் 48,617 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பொள்ளாச்சி வனகோட்டத்திற்குட்பட்ட பகுதியில் வனக்காவலர், வேட்டைத் தடுப்பு காவலர், இயற்கை ஆர்வலர்கள் உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழுவினர் தனித்தனியாக பிரிந்து சென்று கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.