நாகை மாவட்டத்தில் ரூ.51 கோடி மதிப்பில் குடிமராமத்து பணிகள் விரைவில் முடிக்க தீவிரம்: சிறப்பு கண்காணிப்பு அலுவலர் தகவல்

கொள்ளிடம்: ரூ.51 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் விரைவில் முடிக்க தீவிர ஏற்பாடு செய்யப்பட்டு, நடைபெற்று வருகிறது என்று சிறப்பு கண்காணிப்பு அலுவலர் தெரிவித்தார். நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே தண்டேசநல்லூர் கிராமத்தில் குடிமராமத்து பணியின் கீழ் கழுதை வாய்க்கால் தூர்வாரப்பட்டுள்ளதை சிறப்பு கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளிலும் ஆய்வு செய்த அவர் நிருபர்களிடம் கூறுகையில், நாகை மாவட்டத்தில் 80 வாய்க்கால் தூர்வாரும் பணிகளும், 131 கட்டுமான பணிகளும் ரூ.51 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்து பணியின் கீழ் பெரும்பாலான பணிகள் துவங்கி நடந்து வருகிறது. நாகை கலெக்டர் தலைமையின் கீழ் பணிகள் விரைவில் முடிக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றார். ஆய்வின் போது கலெக்டர் பிரவீன்பிநாயர், மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: