குன்னூர்: குன்னூரில் பலாபழம் சீசன் துவங்கிய நிலையில் யானைகள் பழங்களை தின்று சேதபடுத்தி வருவது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளான பர்லியார், மரப்பாலம், கே.என்.ஆர். போன்ற பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான தோட்டங்களில் ஏராளமான பலா மரங்கள் உள்ளன. தற்போது பலாப்பழம் சீசன் துவங்கியுள்ளதால் சமவெளி பகுதிகளிலிருந்து யானைக்கூட்டங்கள் படையெடுத்து வந்து குன்னூர் சுற்று வட்டார பகுதி பழா தோட்டங்கள் அருகில் முகாமிட்டுள்ளன. தோட்டங்களில் உள்ள மரத்தில் 16 அடி உயரத்தில் இருக்கும் பழா பழங்களை யானைகள் சர்வ சாதாரணமாக பறித்து உண்ணுகின்றன. அப்போது ஏராளமான பழங்களும் சேதமாகின்றன. இதனால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.