சென்னை: ஊரடங்கு உத்தரவால் கடந்த 2 மாதங்களாக தொழில் முடங்கியதால் போதிய வருமானம் இன்றி தவித்து வந்த மெக்கானிக் ஒருவர் மெரினா கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். வடபழனி கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கேசவன் (60). மெக்கானிக்கான இவர் அதே பகுதியில் இருசக்கர வாகன பழுது நீக்கும் கடை நடத்தி வந்தார். கொரோனா தடுப்பு காரணமாக கடந்த 2 மாதங்களாக மெக்கானிக் கடை மூடப்பட்டிருந்ததால் போதிய வருமானம் இன்றி கேசவன் குடும்பம் நடத்த வழியில்லாமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடும்பத்தினரிடம் புதுப்பேட்டை வரை சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற கேசவன் வீடு திரும்பவில்லை.