சேலம்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக, பள்ளிகளில் அமைக்கப்பட்ட கொரோனா தனிமை முகாம்களை சமூகநல கூடங்களுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுக்கு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஐசோலேசன் வார்டுகளில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், கொரோனா அறிகுறி உள்ளவர்கள், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். இதேபோல், வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்த அனைத்து மாவட்ட எல்லைப் பகுதிகளிலும், ஒவ்வொரு தாலுகா அளவிலும் தனிமை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான அந்தந்த பகுதிகளில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் பள்ளிகளில் தனிமை முகாம்கள் ஏற்படுத்தப்பட்டது.
பள்ளிகளில் அமைக்கப்பட்ட கொரோனா தனிமை முகாம்கள் சமூக நல கூடங்களுக்கு மாற்றம்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு ஏற்பாடு
- தனிமை முகாம்கள்
- கொரோனா
- பள்ளிகள்
- தேர்தல்
- சமூக நல மையங்கள்
- சமூக பள்ளிகள்: பத்தாம் வகுப்பு தேர்தல்களை ஏற்பாடு செய்தல்
- முடிசூட்டு ஒற்றுமை முகாம்கள்